தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-11-26 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் கூடூர் கிராமம் தெற்கு தெருவில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கொசுகடியினால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீர் தேங்கி கிடப்பதால் விஷப்பூச்சிகளும் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்