வீணாகும் குடிநீர்

Update: 2023-11-19 16:40 GMT

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அண்ணாமலைஅள்ளி ஊராட்சி புதூர் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடைந்த இந்த குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்