ஏரி ஆக்கிரமிப்பு

Update: 2023-11-05 18:24 GMT
சங்கராபுரம் தாலுகா கொசப்பாடி கிராமத்தில் உள்ள ஏரியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்