இடிந்து விடும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-11-05 15:57 GMT

இடிந்து விடும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி

திருப்பூர் கோவில்வழி பகுதியில் இருந்து பெருந்தொழுவு செல்லும் சாலையில் அமைந்துள்ள அமராவதி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. குடிநீர் தொட்டி பல வருடங்களாக தூய்மைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது குடிநீரில் விஷ பூச்சிகள் செத்து மிதந்து வருவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தி சீரமைக்க வேண்டும்.

---------

பாலு,வீரபாண்டி.

98767 63632

மேலும் செய்திகள்