திறந்தநிலையில் கழிவுநீர் வடிகால்

Update: 2023-11-05 10:41 GMT

தஞ்சை கரந்தை போக்குவரத்து கழக பணிமனை அருகே கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை முடியபடி சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் கழிவுநீர் வடிகாலுக்குள் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்