குடிநீர் பிரச்சினை

Update: 2023-10-29 11:55 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கெங்காதரபுரம் ஊராட்சி கொண்டங்கி கிராமத்தில் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று வரக்கூடிய சூழல்நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்