சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-10-08 17:09 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைசந்தம்பட்டி பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தண்ணீர் தொட்டியும் சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுகோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிராசாந்த், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்