பாலத்தில் தேங்கி நிற்கும் குடிநீர்

Update: 2023-10-08 11:59 GMT

பாலத்தில் தேங்கி நிற்கும் குடிநீர்

திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றுப்பாலத்தில் ராட்சத குழாய்கள் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழாயில் இருந்து அதிகப்படியான குடிநீர் வீணாகி பாலத்தில் தேங்கி நிற்கிறது. தமிழகத்தில் தற்போது அணைகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அவ்வாறு இருக்கும்போது குடிநீர் இவ்வாறு வீணாகி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு குடிநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார்,திருப்பூர்.

9879767363

மேலும் செய்திகள்