சேதமடைந்த கைப்பம்பு

Update: 2023-10-01 13:27 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதி மழவராயநல்லூர் அரசு பள்ளி அருகே கைப்பம்பு உள்ளது. இந்த கைப்பம்பு முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. கைப்பம்பின் மேற்பகுதி முழுவதும் உடைந்த நிலையில் இருப்பதால் தண்ணீர் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கைப்பம்பு  தண்ணீருக்காக அந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்