வடிகாலை மூடிய புற்கள்

Update: 2023-10-01 11:41 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மாதுளம்பேட்டை நாச்சியார் கோவில் வழிநடப்பு தெருவில் வடிகால் உள்ளது. இந்த வடிகால் முறையான பராமரிப்பின்றி குப்பைகள் தேங்கி தற்போது புற்கள் வளர்ந்து தரைபோல காட்சி அளிக்கிறது. இதனால் மழைநீர் வடிந்தோட வழியின்றி சாலையிலும், வீடுகளுக்கு முன்பு தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்