குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-27 14:15 GMT


நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரமும் விழும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்