தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

Update: 2023-04-30 17:13 GMT

ராணிப்பேட்டையில் கிருஷ்ணகிரி சாலை-ராணிப்பேட்டை பைபாஸ் சந்திப்பில், பாலாறு பாலம் அருகில் மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து ெசல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் இடறி விழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எப்போது மழை பெய்தாலும் இந்த நிலை ஏற்படுவதால், சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.தன்வந்த் கிருஷ்ணா, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்