தற்காலிக தீர்வு கிடைக்குமா?

Update: 2023-08-30 17:41 GMT

ேவலூா் சத்துவாச்சாரியில் அன்னை தெரசா 4-வது தெரு பகுதியில் டபுள் ரோடு-காந்திநகர் பகுதிகளை இணைக்கும் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படாத காரணத்தால், தெருவில் குளம் போல் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி, அவசர காலத்துக்கு ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, தற்காலிகமாக பாதையில் உள்ள மேடு பள்ளங்களை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்