பேரணாம்பட்டு நகராட்சிக்கு மதினாப்பல்லி மலட்டாற்றில் உள்ள 5 கிணறுகளில் இருந்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகமானது 8 நாட்கள் முதல் 9 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வழங்குகிறது.
மழை பெய்தும் நீராதாரம் இருந்தும் சீரான முறையில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்கள் நலனை கருதி 2 நாட்கள் முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-தினேஷ், பேரணாம்பட்டு.