திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள், பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் பஸ் நிலையத்தில் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் போதுமான குடிநீர் வசதியை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. இதனால் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-அ.ஏழுமலை, திருவண்ணாமலை.