அசுத்தமாக காட்சியளிக்கும் குடிநீர் தொட்டி

Update: 2022-09-15 11:11 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பஸ் நிலையத்தில் வேலூர் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகிலும், விழுப்புரம் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகிலும் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டில் குடிநீர் குழாயின் அடியில் உள்ள தடுப்பில் கழிவு நீர் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. மேலும் தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் ஓடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்