மாசுபடும் அகழி தண்ணீர்

Update: 2023-03-29 15:54 GMT

வேலூர் கோட்டைக்கு வரும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகழியில் வீசுகின்றனர். இது, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால், அகழியில் உள்ள சிறு சிறு மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீர் மாசு படுகிறது. அகழி தண்ணீரில் குப்பை வீசுவதை தடுக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்