ஆரணி கார்த்திகேயன் சாலையில் குடிநீர் குழாய் இணைப்புக்கான பள்ளத்தில் சிமெண்டு சிலாப் சேதம் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தண்ணீர் விடும்போது கழிவுநீர் கலந்து குடிநீருடன் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
-சிவக்குமார், ஆரணி.