குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-29 12:41 GMT

நெமிலி ஒன்றியம் சயனபுரம் ஊராட்சி புதுகண்டிகை கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தில் 2020-2021ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டினார்கள். அந்தப் பணி நிறைவடைந்து பல மாதங்கள் ஆகிறது. அதை, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?

ராதாகிருஷ்ணன், சயனபுரம் 

மேலும் செய்திகள்