பயன்படுத்தப்படாத அடிபம்பு அகற்றப்படுமா?

Update: 2023-02-26 16:34 GMT

வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோட்டில் தபால் நிலையம் அருகில் வாகன, மக்கள் நெரிசலும் அதிகம் உள்ள இடத்தில் சாலை ஓர நடைபாதை பகுதியிலேயே மக்களால் பயன்படுத்த முடியாத ஆழ்துளை கிணறு அடி பம்பு செயல்படாத நிலையில் பல வருடங்களாக உள்ளது. இதனால் மக்களுக்கு நடமாட தொந்தரவாக உள்ளது. உடனடியாக இந்த ஆழ்துளை கிணறு அடி பம்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வஜ்ஜிரவேல், வாலாஜா.

மேலும் செய்திகள்