பழுதான அடிபம்பு சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-02 11:17 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கணபதி முதலி தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அடிபம்பு அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த அடிபம்பு பழுதாகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பழுதான அடிபம்பை உடனடியாக சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்