குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-12-31 17:47 GMT

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி 2-வது வார்டு எடப்பாளையம் கிராமத்தில் மல்லப்ப மந்திரி தெருவில் கழிவுநீர் கால்வாயையொட்டி குடிநீர் குழாய் செல்கிறது. அந்தக் குழாய் உடைந்து அதில் இருந்து குடிநீர் வெளியேறி கழிவுநீருடன் கலக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, மல்லப்ப மந்திரி தெரு.எடப்பாளையம். 

மேலும் செய்திகள்