தற்காலிக நிழற்குடை வசதி தேவை

Update: 2023-04-05 17:26 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உள்ளது. அங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஒரு நிழற்குடை வசதி இல்லை. கொளுத்தும் வெயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர் சிரமப்படுகின்றனர். குடிநீர் குழாய் பகுதியில் தற்காலிக நிழற்குடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, அரக்கோணம். 

மேலும் செய்திகள்