நாகை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழை தண்ணீரில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் மழை தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பொறையாறு