புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் கோல்டன்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயின் பிடி உடைந்தும், இதனை சுற்றி புதர்போல் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.