நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் பாதை உள்ளது. அந்த வழியில் உள்ள வெண்டாங்கி கிராமத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள தார்சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு சாலை சேதம் அடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், வெண்டாங்கி, நாமக்கல்.