தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 6-வது வார்டு பைபாஸ் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து காணப்படுகிறது. பல மாதங்களாக இந்த தொட்டியில் இருந்து குடிநீர் பயன்படுத்தப்படுவது இல்லை. இதுபற்றி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்குள்ள கழிவுகளை அகற்றி குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மூர்த்தி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.