பயனற்ற பொதுக்கிணறு

Update: 2022-08-18 13:11 GMT
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விளந்தை தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகைகள் இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இந்த கிணற்றை சுற்றி மரக்கிளைகள் போடப்பட்டுள்ளதாலும், ஆக்கிரமிப்பாலும், கிணறு பராமரிக்கப்படாமல் உள்ளதாலும் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்றுள்ள இந்த கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்