கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

Update: 2022-08-15 15:08 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பழமத்தூர் ஊராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதால் பலமுறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் பலபேர் காய்ச்சல் சளி ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் வந்தால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்