புதிய குடிநீர் தொட்டி தேவை

Update: 2022-08-14 16:08 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பெரமாண்டம்பாளையம் ஊராட்சி ஒலைபட்டி நாயக்கர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டி விரிசல் விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டியில் கதவு உடைந்தும், தொட்டி மீது மரம் வளர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.

-நவலடி, பெரமாண்டம்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்