கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-01 09:07 GMT
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பாவுப்பட்டு கிராமம். அங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் அருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டு, அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் குடிநீர் கிணறு எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் உள்ளது. அதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் கிணற்றை எட்டிப் பார்த்து செல்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, பாவுப்பட்டு

மேலும் செய்திகள்