புதருக்குள் குடிநீர்தொட்டி

Update: 2022-07-30 15:54 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து மரூர்பட்டி வழியாக முதலைப்பட்டி புதூருக்கு செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. தற்போது அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் குடிநீர் தொட்டியின் அருகே செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்றி குடிநீர் தொட்டியை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரம், முதலைப்பட்டி புதூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்