ஆபத்தான குடிநீர் கேட்வால்வு தொட்டி

Update: 2023-08-30 12:27 GMT

ஆபத்தான குடிநீர் கேட்வால்வு தொட்டி

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செரங்காடு பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செரங்காடு 10-வது வீதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்க அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக அந்த வீதியின் மையப்பகுதியில் கேட்வால்வு தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியை சுற்றியுள்ள வீடுகளில் இருக்கும் குழந்தைகள் தினமும் மாலை நேரத்தில் அந்த வீதியில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த தொட்டி அரைகுறையாக மூடியுள்ளதால் நடந்து சென்ற முதியவர் அதில் விழுந்துள்ளார். எனவே குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த கேட்வால்வு தொட்டிைய சரியாக மூட வேண்டும்

பூவேந்திரன்,திருப்பூர்.

87636 86303

மேலும் செய்திகள்