ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-08-09 17:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டஅள்ளி ஊராட்சியில் எம்.எஸ். நகர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த குடிநீர்தொட்டி சேதமடைந்து, தூண்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் தொட்டியின் உள்புரத்தில் பாசிகள் படிந்து உள்ளதால் தண்ணீரை குடிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதனை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரதீப், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்