ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-08-06 15:39 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஜே.ஆர்.நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து அந்த கிராமத்தில் உள்ள 100 வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டியின் 2 தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.

-குணா, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்