துர்நாற்றத்தால் பெண்கள் அவதி

Update: 2023-08-02 16:27 GMT

சேலம் சூரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பிரதான குடிநீர் குழாய் உள்ளது. இதில் பெண்கள் தினமும் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்த குழாய் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குடிநீர் குழாய் பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்