வீணாகும் குடிநீர்

Update: 2023-08-02 09:13 GMT

இரணியலில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் மடவிளாகத்தை அடுத்து ஒடுப்புரை ஊர் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், வாகனங்கள் செல்லும் போது சாலையில் பாயும் தண்ணீர் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது தெரிப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஆன்டணி, ஆலங்கோடு.

மேலும் செய்திகள்