குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-23 14:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பண்ணப்பள்ளி கிராமத்தில் தீர்த்தம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்