குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-19 12:20 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த  தைலானூரில் வாரம் ஒருமுறை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது வழங்கப்படும் தண்ணீரில் தூசுகள் கலந்து மாசற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் இடையே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்