குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-16 11:14 GMT

நாகை மாவட்டம் திருகண்ணப்புரம் ஊராட்சி ராதாரம்பூர் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் தட்டுபாட்டில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் செய்திகள்