கவிழ்ந்து கிடக்கும் குடிநீர் தொட்டி

Update: 2023-06-28 18:15 GMT
திண்டிவனம் தாலுகா மயிலம் ஊராட்சி ஒன்றியம் கணபதிப்பட்டு கிராமத்தில் உள்ள 2 மினி குடிநீர் தொட்டிகள் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதி்ல் ஒரு குடிநீர் தொட்டி கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்