வீணாகும் குடிநீர்

Update: 2023-06-14 12:13 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சாலையில் குடிதண்ணீர் நடுரோட்டில் வீணாக செல்கிறது. தற்போது நிலவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகும். மேலும் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பேராவூரணி

மேலும் செய்திகள்