குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-06-07 13:36 GMT


தஞ்சை குந்தவை நாச்சியார்அரசு கல்லூரி எதிர்ப்புறம் கண்ணன் நகர் 2 -ம்தெருவில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடி தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடி நீருக்காக பல கிலோ மீட்டர் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்