சேதமடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2023-05-10 18:06 GMT
மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு பகுதியில் உள்ள சுடுகாட்டில் மினிதண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது. தற்போது அந்த தொட்டி சேதமடைந்து தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் இறுதி அஞ்சலிக்கு தண்ணீர் எடுக்க அப்பகுதி மக்கள் வெகுதூரம் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்