குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா ?

Update: 2023-05-10 14:51 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கட்டயங்காடு ஊராட்சியில் உள்ள நீர் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் குடி நீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கட்டயங்காடு

மேலும் செய்திகள்