சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-07-21 17:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் ஒரு பகுதியில் சேதம் அடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்