சீரான குடிநீர் வினியோகம் தேவை

Update: 2023-04-23 07:49 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. சில நேரங்களில் நள்ளிரவு நேரத்தில் லாரியில் கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்கின்றனர். இதனால், பெரும்பாலான மக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் போவதால் குழந்தைகளுடன் பெரும் அவதிக்குளாகி வருகின்றனர். எனவே, பகல் நேரத்தில் லாரியில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இர்பான், புதுக்குடியிருப்பு.

மேலும் செய்திகள்