குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

Update: 2023-03-29 14:29 GMT
  • whatsapp icon
புதுக்கோட்டை மாவட்டம், குண்றான்டார் கோவில், மூட்டாம்பட்டி ஊராட்சியில் சம்பாகுளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். இதனால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்