குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-03-29 12:37 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் பங்களா பஸ் நிறுத்தத்தில்ஆர்.சி.ஆர்.வணிக வளாகத்தின் கீழ் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் தினமும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாகி வருகிறது. இதனை மறைப்பதற்காக குழாய் மூலம் வீணாகும் தண்ணீரை கழிவுநீர் கால்வாயில் விட்டுள்ளனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார்தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

அபி,திருப்பூர்.

9944911124

மேலும் செய்திகள்