வீணாகும் குடிநீர்

Update: 2023-03-29 09:10 GMT

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தெற்கு மூப்பரன் தெருவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி  வைத்து 2 ஆண்டுகள் ஆவதால் சேதம் அடைந்து தினமும் தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்